https://www.facebook.com/photo.php?fbid=10203775521412815&set=a.2238900256319.2108313.1362411743&type=1 சங்ககாலத்தில்
அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும்,
நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள்.
தை முதல் நாளில் இந்த
நோன்பை முடிப்பார்கள்.
நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக
பூமி,
பகலவன்,
உதவிய கால்நடை,
போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.
இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும்
பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.
பொங்கல் பண்டிகையைப்
பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க
உண்மையாக இருந்து வருகிறது.
இந்திர_
விழா என்ற பெயரில்
இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது.
மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_
விழா என்ற பெயரில்
பொங்கல்கொண்டாடப்பட்டது.
இந்த விழா,
காவிரி
பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
இப்போது,
பொங்கல்,
தைப்பொங்கல்,
மாட்டு பொங்கல்,
காணும்
பொங்கல் என்ற மூன்று நாட்கள்
மட்டுமே கொண்டாடப்படுகிறது.
ஆனால்,
அந்தக் காலத்தில்
28
நாள்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.
முதன்முதலாக இந்திர விழாநடத்திய போது
அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து
பொது அறிவிப்பாக அறிவித்தனர்.
இப்போது பொங்கல் ஊரையும்,
நாட்டையும் சுத்தம் செய்வது போல
அப்போதும் நடந்துள்ளது.
நகர வீதிகளில் பழைய
மணலை மாற்றி புது மணல்
பரப்பினர்.
காவல் தெய்வங்கள் முதல்
சிவன் கோயில்கள் வரை சிறப்புப் பூஜை
நடைப்பெற்றது.
இவ்விழா நாளில் பகைமை,
பசி,
நோய் நீங்க இறைவன்
பிரார்த்தனை செய்யப்பட்டது.
மழைக்குரிய தெய்வம்இந்திரன்,
அவனை வழிபட்டால்,
மாதம்
மும்மாரி பெய்து பயிர் செழிக்கும்
என மக்கள் நம்பிக்கை.
பிற்காலத்தில்,
சூரியன் பற்றிய அறிவு
மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து,
தங்கள்கண் முன் காட்சி தரும்
அந்த கடவுள் பொங்கல் படைத்து
வழிபட்டனர்.
பூமி இருக்கும் நீர்
ஆவியாக்கி மேலே கொண்டு சென்று,
ஒன்றுக்குப் பத்தாக மழைபெய்விப்பார் என்ற
ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் அறுவடை செய்த புது
நெல் தை முதல்நாளில் சமையல்
இந்திர விழா என்ற பெயர்
பொங்கல் என மாறியது